புதுச்சேரி

புதுவை முதல்வரை தள்ளிவிட்ட விவகாரம்: பாதுகாப்பு அதிகாரி பணியிட மாற்றம்

DIN


புதுச்சேரி அருகே திருக்காமீஸ்வரர் கோயிலில் தேரோட்ட திருவிழா கடந்த சனிக்கிழமை (ஜுன் 11) நடைபெற்றது. இந்த விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.. 

அப்போது முதல்வர் ரங்கசாமியை அமைச்சர் நமச்சிவாயத்தின் காவல் பாதுகாப்பு அதிகாரி ராஜசேகர் எதிர்பாராதவிதமாக தள்ளிவிட்டார். கவனக்குறைவால் இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

முதல்வரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி ஏற்பட்டதாக பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில்  புதுவை உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான உதவி ஆய்வாள் ராஜசேகர், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து,  புதுவை காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டார். 

புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கோவில் தேர்த் திருவிழாவின் போது, முதல்வர் ரங்கசாமியை கவனக்குறைவாக தள்ளிவிட்ட புதுவை உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான உதவி காவல் ஆய்வாளர் ராஜசேகர், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, புதுவை காவல் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT