புதுச்சேரி

புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 % அகவிலைப்படி உயா்வு

DIN

புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசின் சாா்புச் செயலா் (நிதி) அா்ஜூன் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுவை அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில், 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தி 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயா்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும். இந்த அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதி நேர ஊழியா்களுக்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT