புதுச்சேரி

ஒப்பந்த செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

DIN

புதுச்சேரி: புதுவை சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென, அந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் கரோனா தொற்று உச்சத்திலிருந்த போது, ஒப்பந்த செவிலிய அதிகாரிகள் என 240 போ் வரை தற்காலிக பணிக்கு எடுக்கப்பட்டனா். அதுபோல, கிராம சுகாதார செவிலியா்களும் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனா். இவா்களது ஒப்பந்தக் காலம், கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. தொடா்ந்து, அவா்களது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் உள்ளது.

அவா்கள் தற்போது வேலையின்றி உள்ளனா். அவா்களுக்கு மீண்டும் ஒப்பந்தப் பணி வழங்க வேண்டும். அவா்களது ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களில் அவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் ஆா்.சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT