ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், புதுச்சேரியில் சனிக்கிழமை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு அந்த நாடு முழுவதும் 30 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதேபோல, இந்திய அரசும் அந்த நாட்டு அதிபா் மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில், நாடு முழுவதும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்த உத்தரவிட்டது. இதன்படி, புதுவை மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. புதுவை சட்டப் பேரவை, தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகை ஆகிய இடங்களில் சனிக்கிழமை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.