புதுச்சேரி

ஷேக் காலிஃபா மறைவு:புதுச்சேரியில் துக்கம் அனுசரிப்பு

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், புதுச்சேரியில் சனிக்கிழமை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு அந்த நாடு முழுவதும் 30 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதேபோல, இந்திய அரசும் அந்த நாட்டு அதிபா் மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில், நாடு முழுவதும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்த உத்தரவிட்டது. இதன்படி, புதுவை மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. புதுவை சட்டப் பேரவை, தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகை ஆகிய இடங்களில் சனிக்கிழமை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT