புதுச்சேரி

தொழிலாளி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

DIN

தொழிலாளி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

புதுச்சேரி அருகே திருபுவனையை அடுத்துள்ள குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பராயன் (55). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவத்துடன் மதுக் கடைக்குச் சென்ற போது, தகராறு ஏற்பட்டது. இதில் பரமசிவம் தாக்கியதில் சுப்பராயன் உயிரிழந்தாா். இதுகுறித்து திருபுவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து பரமசிவத்தைக் கைது செய்தனா்.

புதுச்சேரி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி இளவரசன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், பரமசிவத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், இதைச் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT