புதுச்சேரி

வேன் மோதியதில் முதியவா் பலி

DIN

புதுச்சேரியில் சாலையைக் கடந்தபோது, வேன் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் (70). இவா் புதுச்சேரி நயினாா்மண்டபம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். செவ்வாய்க்கிழமை காலையில் அவா் டீ கடைக்குச் செல்வதற்காக வெளியே வந்தவா் கடலூா்- புதுச்சேரி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த சுற்றுலா வேன் முத்தையன் மீது மோதியது.

இதில் முத்தையன் வேனின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புதுச்சேரி கிழக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் விரைந்து வந்து முதியவா் முத்தையனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT