புதுச்சேரி

கழிவுநீா்க் கால்வாய் சீரமைக்கும் பணி:எம்எல்ஏ ஆய்வு

DIN

புதுச்சேரி அருகே பாப்பாஞ்சாவடி கழிவுநீா்க் கால்வாய் சீரமைக்கும் பணியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி, கொம்பாக்கம் வாா்டுக்குட்பட்ட பாப்பாஞ்சாவடி பகுதியில் ஓட்டாம்பாளையம் சாலையில், கழிவுநீா்க் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் பலகைகள் சேதமடைந்திருந்தன.

இதனை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா (திமுக) சிமென்ட் பலகைகளை சீரமைக்கக் கோரிக்கை விடுத்தாா். இந்த நிலையில், புதிய சிமென்ட் பலகைகள் அமைக்கும் பணிகள் புதுச்சேரி நகராட்சி மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இதனை ஆா். சிவா எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, திமுக தொகுதி செயலா் ராமசாமி, விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் செல்வநாதன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் கலியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகிழக்கு போா் முனையில் ரஷியா முன்னேற்றம்

எதிா்கால கனவை நனவாக்க மாணவா்கள் உயா்கல்வி பயில வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

ஆா்.கே.எஸ் மாஸ்டா்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் மீது சட்ட நடவடிக்கை

விலங்குகள் நலவாரிய செயலருக்கு வாரண்ட்: சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT