புதுச்சேரி

ஆசிரியா் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவையில் ஆசிரியா் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

புதுவையில் ஆசிரியா் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து புதுச்சேரி ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன முதல்வா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் கல்வியாண்டுக்கான 2 ஆண்டுகள் ஆசிரியா் பட்டயப் படிப்புக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், சோ்வதற்கு, பிளஸ் 2 அல்லது அதற்குச் சமமான தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களும்,

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

ஜூன் 1 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் லாஸ்பேட்டை, தொல்காப்பியா் வீதி, மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பங்களை பெற்று தேவையான நகல், சான்றிதழ்களோடு வரும் ஜூலை 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT