முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 அக்டோபர் 2024, 8:42 am IST
கோப்புப் படம்.
பகிர்:

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், சனிக்கிழமை (அக்.19) முதல் வியாழக்கிழமை (அக்.24) வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடர்மழை பெய்து வருகிறது.

இதையடுத்து கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments