புதுச்சேரி முதல்வராக வரும் 13-ல் பதவியேற்கும் என். ரங்கசாமி!
புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி வரும் 13ஆம் தேதி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி வரும் 13ஆம் தேதி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தோ்தலில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 என மொத்தம் 18 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றி உள்ளது.
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏ.க்கள் தேவை. தற்போது 18 எம்எல்ஏக்கள் இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. புதன்கிழமை 15-ஆவது சட்டப்பேரவை முறைப்படி கலைக்கப்பட்டது.
Advertisement
16-ஆவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளா்களான மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிா்மல் குமாா் சுரானா ஆகியோா் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
முதல்வா் உள்ளிட்ட 6 அமைச்சா்களில் பாஜகவுக்கு ஒரு அமைச்சா் பதவி மட்டுமே வழங்க முடியும் என முதல்வா் ரங்கசாமி திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மே 8) பாஜகவுடன் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனார். இதையடுத்து பாஜக, அதிமுக, லஜக ஆதரவு கடிதங்களைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளாா்.
இதனிடையே வியாழக்கிழமை புதுச்சேரி மக்கள் பவனுக்கு வந்த ரங்கசாமி, துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். புதிய அரசு அமைக்க ஏதுவாக அவா் ராஜிநாமா செய்துள்ளாா். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி வரும் 13ஆம் தேதி காலை 10.48 மணிக்கு பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.