பைக்கில் சென்றவர் கீழே விழுந்து சாவு
கள்ளக்குறிச்சியை அடுத்த தோட்டப்பாடி அருகே பைக்கில் சென்றவர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தோட்டப்பாடி அருகே பைக்கில் சென்றவர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த காளசமுத்திரம் கிழக்குக் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்தவர் பெரியசாமி மகன் ராஜேஷ் (39). இவர், நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், அறுவடை இயந்திரம் பழுதடைந்ததால், அதனை சின்னசேலத்தில் உள்ள பட்டறையில் பழுது நீக்குவதற்காக விட்டிருந்தார். அதனை சீர்செய்து விட்டனரா என்று பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சென்றார். தோட்டப்பாடி அருகே சென்ற போது, சாலையில் நாய் குறுக்கிட்டதால், நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.