மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் சாவு
கள்ளக்குறிச்சி அருகே மொபெட் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே மொபெட் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்தராஜா (18). இவர், தனது நண்பரான புதூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பிரகாஷுடன் நைனார்பாளையம் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். மொபெட்டை பிரகாஷ் ஓட்டிச் சென்றார்.
செம்பாக்குறிச்சி மான்குட்டை அருகே சென்ற போது மொபெட் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். அவர்களில் ஆனந்தராஜா வேப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரகாஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.