விழுப்புரம்

ராகவேந்திர சுவாமிகள் அவதார தின விழா

தினமணி

விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோயிலில், ராகவேந்திரரின் 423-ஆவது அவதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் அவதார தின விழா காலை 5 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியது. ஸ்தோத்ர பாராயணம் பாடினர். 7 மணிக்கு வண்டிமேடு ராஜகணபதி கோயிலிலிருந்து ராகவேந்திர சுவாமிகள் ஆலயம் வரை 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு நிர்மால்ய அபிஷேகமும், பஞ்சாமிர்த அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு குருவாரா பஜனை மண்டலி சார்பில் ஹரிபஜன் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு சுவாமிக்கு மகாதீபாராதனையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ராகவேந்திர சுவாமிகளை வழபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT