மாவட்ட நூலகத்தில் குரூப் -2 மாதிரி தேர்வு
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை குரூப்- 2 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை குரூப்- 2 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இங்கு, குரூப்-2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நவம்பர் 11-ஆம் தேதி, குரூப்-2 போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதனையொட்டி, மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாதிரித் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக, பொது நுலகத் துறையும், தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியும் இணைந்து குரூப் -2 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வை கடந்த மாதம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.4) நடைபெற்றது.
இதில், 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
தேர்வினை நூலகர்கள் இளஞ்செழியன், முருகன், ஊர்புற நூலகர் சங்கர் ஆகியோர் கண்காணித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.