விழுப்புரம்

வேன் மோதியதில் மூதாட்டி சாவு

தினமணி

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் காஞ்சிபுரத்துக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.
 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே காரை நிறுத்தினர். அப்போது, காரிலிருந்து இறங்கி சாலையைக் கடக்க முயன்ற பாலசுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி (70) மீது அவ்வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT