விழுப்புரம்

அதிவேகமாக பைக் ஓட்டிய 6 இளைஞர்களுக்கு அபராதம்

DIN

திருவண்ணாமலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டியதாக 6 இளைஞர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை நகர டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை - போளூர் சாலையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது, 4 பைக்குகளில் 6 பேர் கூச்சலிட்டபடியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் சென்றனர்.
இவர்கள் 6 பேரையும் போலீஸார் வழிமறித்துப் பிடித்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 
பின்னர், 6 இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் போலீஸார் அறிவுரை வழங்கினர். மேலும், 6 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT