விழுப்புரம்

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்

DIN

கள்ளக்குறிச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள சங்க வளாகக் கட்டடத்தில்  நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கோ.இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்க உறுப்பினர்கள் பெரியசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் சின்னாப்பிள்ளை வரவேற்றார். கூட்டத்தில், உயிரிழந்த சங்க உறுப்பினர்கள் ந.அரங்கநாதன், அ.வெள்ளையன், சி.ஆர்.தாஸ் ஆகியோருக்கும், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், ந.கோமுகிதாசன், மா.முத்தமிழ்முத்தன் ஆகியோர் இலக்கிய உரையாற்றினர். பொன்.அறிவழகன் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூறாவது நினைவு நாள் குறித்து பேசினார். 
வி.சரவணன் உள்பட சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT