விழுப்புரம்

கூழாங்கற்கள் கடத்தல்:இளைஞா் கைது

DIN

உளுந்தூா்பேட்டை அருகே லாரியில் கூழாங்கற்களை கடத்திச் சென்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சடையப்பிள்ளை மற்றும் காவலா்கள் முருகன், மற்றொறு முருகன் உள்ளிட்டோா் திம்மிரெட்டிபாளையத்தில் இருந்து மட்டிகை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த லாரியில் கூழாங்கற்களை கடந்த வந்த ஓட்டுநரான காளமேடு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் வெற்றிவேல் (25) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா். மேலும், லாரியை பறிமுதல் செய்ததுடன், தப்பியோடிய அவரது அண்ணன் வெங்கடேசனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT