விழுப்புரம்

வாடகை காரை ஒப்படைக்காமல் ஏமாற்றியவர் கைது

DIN

கள்ளக்குறிச்சியில் வாடகைக்கு எடுத்துச் சென்ற காருக்கு பணம் தராமலும், நகையை வாங்கிக் கொண்டு ஏமாற்றியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
 சங்கராபுரம் வட்டம், செம்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் மகன் சங்கர் (38).  கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ உடையார் மகன் ராமச்சந்திரன் (41). இருவரும் கார் உரிமையாளர்கள். நண்பர்கள் ஆவர்.
ராமச்சந்திரன் சங்கரின் காரை கடந்த 10.9.2018ல் வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் மாத வாடகை தருவதாக கூறியுள்ளார். செலவிற்கு பணம் வேண்டும் என்று கேட்டவுடன் ஐந்தரை பவுன் நகையை கொடுத்துள்ளார். இதுநாள் வரை காருக்கு வாடகையும்  ஐந்தரை பவுன் நகையையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். 
இது குறித்து சங்கர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

SCROLL FOR NEXT