விழுப்புரம்

அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வரகண்டநல்லூரில் மயானப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவர் த.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு டி.கலியமூர்த்தி, மாநில துணைத் தலைவர் 
ஆர்.ராஜசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ. (எம்.எல்) கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஈஸ்வரகண்டநல்லூர் ஆதிதிராவிட மக்களுக்கு மயானப் பாதை, சுகாதார நிலைய கட்டடம், பூட்டி கிடக்கும் நூலகத்தை திறப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT