விழுப்புரம்

வாடகை மையம் அமைக்க கரும்பு அறுவடை இயந்திரம் அளிப்பு

DIN

சங்கராபுரம் வட்டத்தில் வாடகை மையம் அமைக்க உயர் தொழில்நுட்ப கரும்பு அறுவடை இயந்திரத்தை மானியத் திட்டத்தின் கீழ், பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வழங்கினார்.
 சங்கராபுரம் வட்டம், சீர்ப்பனந்தல் ஊராட்சியில் கரும்பு அறுவடை இயந்திர வாடகை மையம் அமைக்கும் பயனாளிக்கு மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை - 1 மற்றும் வேளாண் பொறியியல் துறை இணைந்து உயர் தொழில்நுட்ப கரும்பு அருவடை இயந்திரத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில், சங்கராபுரம் வட்டம், பிரம்மகுண்டம் ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிக்கு ரூ. ஒரு கோடியே 29 லட்சத்து 14 ஆயிரத்து 516 மதிப்பிலான உயர் தொழில்நுட்ப கரும்பு அறுவடை இயந்திரத்தை ரூ.47 லட்சத்து 8 ஆயிரத்து 190 மானியத்தில் பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை -1) அனுசுயாதேவி, வேளாண் பொறியியல் துறை விழுப்புரம் செயற்பொறியாளர் சுதாகர், கள்ளக்குறிச்சி உதவிச் செயற்பொறியாளர் குமாரகணேஷ், மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை - 1 தலைவர், அரசு, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT