முகப்பு
விழுப்புரம்

அடுப்பை மூட்டி குளிர்காய்ந்த மூதாட்டி தீயில் கருகிச் சாவு

கோட்டக்குப்பம் அருகே அடுப்பை மூட்டி குளிர் காய்ந்த மூதாட்டி, தீயில் கருகி உயிரிழந்தார்.

Updated On : 23 ஜனவரி 2019, 9:47 am IST
பகிர்:

கோட்டக்குப்பம் அருகே அடுப்பை மூட்டி குளிர் காய்ந்த மூதாட்டி, தீயில் கருகி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மாத்தூரைச் சேர்ந்த பெருமாள் மனைவி முனியம்மாள்(62). இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு  இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, கடும் பனி காரணமாக விறகு அடுப்பைப் பற்ற வைத்து, குளிர்காய்ந்துள்ளார். 
அப்போது, எதிர்பாராதவிதமாக முனியம்மாளின் ஆடையில் தீ பற்றியது. இதில், பலத்த தீக்காயம் அடைத்த அவரை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.