விழுப்புரம்

வாகனச் சோதனையில் ரூ.1.30 லட்சம் பறிமுதல்

DIN

சின்னசேலம் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.30 லட்சம் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே வி.கூட்டுச்சாலைப் பகுதியில் வட்டாட்சியர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் மதிவாணன் தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை இரவு சேலம் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சின்னசேலம் அருகே உள்ள கருங்குழி பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சசிகுமார் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்தத் தொகை கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நெல் அறுவடை இயந்திரத்துக்கு உதிரிப்
பாகங்கள் வாங்குவதற்காக பணத்தை எடுத்து சென்றதாக சசிகுமார் தெரிவித்துள்ளதால், அது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT