விழுப்புரம்

சாலை விபத்தில் சிறப்பு எஸ்.ஐ. பலி

DIN

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த சமூக நீதிப் பிரிவு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இயங்கி வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (54). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT