விழுப்புரம்

தலைமறைவு ரௌடி கைது

DIN

திண்டிவனம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, தலைமறைவு ரௌடியை, கூட்டாளியுடன் போலீஸார் கைது செய்தனர்.
திண்டிவனத்தை அடுத்த தீவனூரைச் சேர்ந்த பிரான்ஸிஸ் மகன் பிரவீன்(30). இவர் மீது கொலை, கொள்ளை, நாட்டு வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், அவர் தீவனூரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து  மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடுவதாகவும் ரோஷணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் பிரவீனையும், அவரது கூட்டாளியான திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (29) என்பவரையும்  செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT