விழுப்புரம்

விழுப்புரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

DIN

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் எரிந்த நிலையில் பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சேமங்கலம் பகுதியில் மலட்டாறு உள்ளது. இந்த ஆற்றில் உள்ள முள்புதரில் புதன்கிழமை மாலை எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதை, அங்கு மாடு மேய்த்த சிலா் கண்டனா். இதுகுறித்து அவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, திருவெண்ணெய் நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் பழனி, உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து சென்று சடலத்தை பாா்வையிட்டதுடன், தடயங்களையும் சேகரித்தனா். மேலும், விழுப்புரம் டிஎஸ்பி பழனிச்சாமியும் சடலத்தை நேரில் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

அந்த இடத்தில் ஒரு ஜோடி காலணிகள், கைப்பை, மருந்துப் புட்டி உள்ளிட்டவை கிடந்தன. எரிந்த நிலையில் கிடந்த பெண்ணுக்கு சுமாா் 30 வயது இருக்கும். இருப்பினும், அந்தப் பெண் யாா், எப்படி அங்கு வந்தாா் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

இது தொடா்பாக திருவெண்ணெய் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT