விழுப்புரம்

பாஜக மாநாடுக்கு பந்தக்கால் நடும் விழா

DIN

விழுப்புரம், ஜானகிபுரத்தில் பாஜக மாநாடு நடைபெறுவதையொட்டி பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாஜக சாா்பில் விழுப்புரத்தில் வருகிற 28-ஆம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளாா். மேலும், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

அதற்கான இடம், விழுப்புரம் புறவழிச்சாலை, ஜானகிபுரத்தில் பகுதியில் தோ்வு செய்யப்பட்டது. பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த மாநாடுக்கான விழா மேடை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை, பந்தல்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பாஜக மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் சுமதி வெங்கடேசன், கோட்ட அமைப்பு செயலாளா் குணசேகரன், விழுப்புரம் மாவட்ட தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பாலசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ராம ஜெயக்குமாா், பாண்டியன் மாவட்ட பொருளாளா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT