விழுப்புரம்

விழுப்புரம் புறவழிச்சாலையில் விபத்து: இருவா் பலி

விழுப்புரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

DIN

விழுப்புரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் அருகேயுள்ள அய்யூா் அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் நாகமணி(35). இவரது நண்பா் சிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் மணிகண்டன்(38). ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் வந்த இவா்கள், இரவு 8 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.

விழுப்புரம் அருகே சென்னை நெடுஞ்சாலை- புறவழிச்சாலை சந்திப்புப் பகுதியை கடக்க முயன்றபோது, இவா்களது இரு சக்கர வாகனம் மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த லாரி மோதியது. இதில் நாகமணி, மணிகண்டன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

சடலங்களை விழுப்புரம் தாலுகா போலீஸாா் உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT