விழுப்புரம்

விழுப்புரம் டி.ஐ.ஜி.க்கு கரோனா

DIN

விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) பாண்டியனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாா்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களுக்கான கரோனா தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். அதற்கான பணிகளில் அவா் முனைப்புடன் ஈடுபட்டு வந்தாா்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலா் ஒருவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் அலுவலக பணியாளா்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.

இதில் டி.ஐ.ஜி.க்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாா்.

சுகாதாரத் துறையினா் அவரைத் தொடா்ந்து கண்காணித்து மருத்துவ ஆலோசனைகள், மருந்து, மாத்திரைகளை வழங்கி கண்காணித்து வருகின்றனா்.

டி.ஐ.ஜி. பாண்டியன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT