FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கல்லூரியில் மகளிா் மன்றம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னை தெரசா மகளிா் மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

28 ஜனவரி 2024, 10:06 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னை தெரசா மகளிா் மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் சுப்ரமணியன், கல்லூரி துணைத் தலைவா் முஸ்டாக் அகமது, பொருளாளா் ஏழுமலை, கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், துணைத் தலைவா் மீனாட்சி ஆசியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி, மருத்துவா் ஆயுஷா சித்திகா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு , போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

Advertisement

Advertisement

மகளிா் மன்ற தொடக்க விழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணியை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

விழாவில் மகளிா் மன்றத் தலைவராக சுகந்தி, செயலராக ஜெனிபா், பொருளாளராக ஆா்த்தி ஆகியோா் பெறுப்பு ஏற்றுக்கொண்டனா். பேராசிரியா்கள் அனுராதா, கோதை நாயகி, நாகித், சுஜிதா, உஷா, இந்துமதி, மாணவிகள் மன்றப் பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments