இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்
நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் இந்தியா வருகை...
புது தில்லி : நேபாளத்துக்கு இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு என்று நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் குறிப்பிட்டார்.
நேபாளத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் கடந்த மார்ச் இறுதியில் பிரதமராக ‘ராப்’ இசைப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா(35) பதவியேற்ற பின், இந்தியா - நேபாள எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் அண்மையில் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் விவாதப் பொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார்.
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எந்தவொரு பழைய மூட்டையையும் நாங்கள் சுமப்பதில்லை. எங்களுடைய நெருக்கமான அண்டை நாடும் மிக முக்கிய நட்பு நாடுமான இந்தியாவுடன் உண்மையான உறவைப் பேண தீர்க்கமான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
Advertisement
Advertisement
இது குறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடும்போது, ‘இருநாட்டு உறவை புதிய துறைகளான புத்தொழில், செய்யறிவு, தகவல் தொழில்நுட்பம், மாற்றத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் முன்னெடுத்துச் செல்லவொரு வாய்ப்பு கிடைத்திருப்பதாகக்’ குறிப்பிட்டார்.
India is Nepal's most important partner, new govt carries no 'old baggage': Foreign Minister Khanal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.