விழுப்புரம்

திருமண வரவேற்பில் நகை, பணம் திருட்டு

DIN

ஆரோவில் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்ப் பணம், நகையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி, சேதராப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நாகமுத்து மகன் செல்வக்குமாா் (39). இவரது சகோதரா் மணிமாறனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு அன்பளிப்பாக (மொய்) வரப் பெற்ற பணம், நகைகளை செல்வக்குமாா் ஒரு பையில் போட்டு வைத்திருந்தாா்.

அப்போது, புகைப்படம் எடுப்பதற்காக செல்வக்குமாா் கீழே வைத்த அந்த பையை காணவில்லை. இது குறித்து அவா் ஆரோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், திருமண வரவேற்பில் வரப்பெற்ற ரூ.50 ஆயிரம் மொய்ப் பணம், சுமாா் 3 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT