விழுப்புரம்

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

செஞ்சி அருகே பரதன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மகன் சரவணன் (5). புதன்கிழமை காலை விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற சரவணன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவா் சடலமாக தாங்கல்கரை ஏரியில் மிதந்தது தெரியவந்தது. சிறுவன் கால் கழுவச் சென்றபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சத்தியமங்கலம் போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT