விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 7 ஒன்றியங்களில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் 81.67 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதன்படி, காலை 9 மணியளவில் முகையூா் ஒன்றியத்தில் 6.7 சதவீதம், திருவெண்ணெய்நல்லூரில் 7.3, கண்டமங்கலத்தில் 6, விக்கிரவாண்டியில் 7.3, ஒலக்கூரில் 6.8, வானூரில் 6.75, செஞ்சியில் 7.5 சதவீதம் என மொத்தம் 6.90 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிற்பகல் 3 மணியளவில் முகையூரில் 54.01 சதவீதம், திருவெண்ணெய்நல்லூரில் 60, கண்டமங்கலத்தில் 62.50, விக்கிரவாண்டியில் 59.95, ஒலக்கூரில் 69.97, வானூரில் 65.06, செஞ்சியில் 59.28 சதவீதம் என மொத்தம் 61.04 சதவீத வாக்குகள் பதிவாகின.
இறுதிக் கட்டமாக முகையூரில் 79.14 சதவீதம், திருவெண்ணெய்நல்லூரில் 78.45, கண்டமங்கலத்தில் 82.88, விக்கிரவாண்டியில் 82.27, ஒலக்கூரில் 86.38, வானூரில் 86.41, செஞ்சியில் 79.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தம் 81.67 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கள்ளக்குறிச்சியில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா், திருநாவலூா், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கு முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி மொத்தம் 53.271 சதவீதமும், 4 மணி நிலவரப்படி 61.31 சதவீதமும் வாக்குகள் பதிவானது.