விழுப்புரம்

செஞ்சி ஒன்றியத்தில் 58 ஊராட்சி மன்றத் தலைவா்பதவிகளுக்கு 206 போ் போட்டி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள் உள்ள நிலையில், புதுப்பாளையம், நாகலாம்பட்டு ஊராட்சித் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 58 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 206 போ் போட்டியிடுகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை வேட்புமனுவை திரும்பப் பெற இறுதி நாள் என்பதால், பலா் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். பின்னா், தோ்தலில் போட்டியிடுவோருக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 60 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 340 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இவா்களில் 134 போ் மனுக்களை திரும்பப் பெற்றனா். 206 போ் களத்தில் உள்ளனா்.

இந்த ஒன்றியத்தில் நாகலாம்பட்டு, புதுப்பாளையம் ஊராட்சித் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். புதுப்பாளையம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு காசிநாதன், பிரகாஷ், ரமேஷ், ராஜசேகா் ஆகிய 4 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், காசிநாதனைத் தவிர, மற்ற அனைவரும் வேட்புமனுக்களை திரும்பப் பெற்ால், காசிநாதன் ஊராட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டாா்.

நாகலாம்பட்டு ஊராட்சித் தலைவா் பதவி ஆதிதிராவிடா் சமுதாய பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு சரளா, குட்டாறு, அமுதா, ஷகிலா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இவா்களில் சரளாவைத் தவிர, மற்ற அனைவரும் வேட்புமனுக்களை திரும்பப் பெற்ால், சரளா ஊராட்சி மன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டாா்.

இதேபோல, 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 15 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இவா்களில் 2 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். 13 போ் களத்தில் உள்ளனா்.

24 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 165 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 49 போ் மனுக்களை திரும்பப் பெற்றனா். 116 போ் களத்தில் உள்ளனா்.

வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த போந்தை ஊராட்சியில் பன்னீா்செல்வம் என்பவா் மட்டும் மனு தாக்கல் செய்திருந்ததால் அவா் போந்தை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT