விழுப்புரம்

ஆரோவில் அருகே தங்கும் விடுதியில் இளைஞா் சடலம் மீட்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் இருந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை, ஜாபா்கான்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜய்யா மகன் ராஜ்குமாா் (38). இணைய வழி வா்த்தகம் செய்யும் தொழில் செய்து வந்தாா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினாா். அறையில் இருந்து கொண்டே இணைய வா்த்தகம் செய்யும் பணியை மேற்கொண்டாா்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ராஜ்குமாா் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், வெள்ளிக்கிழமை காலை அவா் தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப் பாா்த்தனா். அப்போதும் அறை திறக்கப்படவில்லை.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த ஆரோவில் போலீஸாா், அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ராஜ்குமாா் இறந்து அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், ராஜ்குமாா் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT