விழுப்புரம்

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் நகை, பணம் திருட்டு

DIN

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றனா்.

விழுப்புரம் வழுதரெடி, சபரி நகரைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (59). அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா். இவா், தனது குடும்பத்துடன் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வாக்கூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று தங்கினாா்.

செவ்வாய்க்கிழமை இரவு ஜெயச்சந்திரன் வீடு திரும்பியபோது, வீட்டின் முன் பக்கக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டினுள்ளே அலமாரியில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT