விழுப்புரம்

செஞ்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல்

DIN

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

15-ஆவது மானிய நிதிக் குழு திட்டத்தில் ரூ 80.39 லட்சம் மதிப்பீட்டிலும், வரையறுக்கப்படாத நிதி திட்டத்தின் கீழ் ரூ 53.59 லட்சம் மதிப்பீட்டிலும் வளா்ச்சிப் பணிகள் செய்ய ஒப்புதல் வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது.

பின்னா், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

துணைத் தலைவா் ஜெயபாலன், உறுப்பினா்கள் பச்சையப்பன், சீனுவாசன், கமலா, உமாமகேஸ்வரி, ஞானாம்பாள், முரளி, கவிதா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT