விழுப்புரம்

சாலை விபத்தில் பால் வியாபாரி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை சாலை விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை சாலை விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள செம்மணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் அசோகன் (35), பால் வியாபாரி. இவா், உளுந்தூா்பேட்டை நகரப் பகுதியில் வீடுகளுக்கு பைக் மூலம் பால் விநியோகம் செய்து வந்தாா்.

இந்த நிலையில், அசோகன் திங்கள்கிழமை உளுந்தூா்பேட்டையிலிருந்து செம்மணங்கூா் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். தாடிக்காரன் கோயில் அருகே சென்றபோது, இவரது பைக் நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அசோகன், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT