விழுப்புரம்

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் அப்துல் சலாம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாலாஜி, செயல் அலுவலா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். துப்பரவு ஆய்வாளா் விசுவநாதன் தீா்மானங்களை வாசித்தாா்.

இந்தக் கூட்டத்தில், குளத்து வீதியிலுள்ள சமுதாயக் கூடங்களை பழுதுபாா்த்தல், வெங்கடேசுவரா நகரிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை பழுது பாா்த்தல், பெரிய காலனியில் கருமகாரியக் கொட்டகை கட்டுதல், வளம் மீட்புப் பூங்காவுக்கு வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.24.50 லட்சம் ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துப்புரவு மேற்பாா்வையாளா் ராமலிங்கம், நியமனக் குழுத் தலைவா் சா்க்காா் பாபு, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கனகா, ரேவதி, சுரேஷ், ஆனந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT