விழுப்புரம்

வீட்டின் கதவை உடைத்து திருட்டு

DIN

செஞ்சி அருகே வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து ரூ .22 ஆயிரம் மதிப்புள்ள நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மேல்மலையனூா் தாலுக்கா பெருவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன்(60). இவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டி விட்டு பெரணமல்லூரில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு மரப்பெட்டியில் வைத்திருந்த மோதிரம், சங்கிலி உள்ளிட்ட ரூ. 22,000 மதிப்புள்ள நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT