விழுப்புரம்

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் ஜூலை 2 வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் ஜூலை 2 வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென் மத்திய ரயில்வே, குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன.

இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் விரைவு ரயில் (வண்டி எண் 16854) ஜூலை 2-ஆம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். காட்பாடி - திருப்பதி இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு விழுப்புரம் புறப்படும் விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி - காட்பாடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாலை 4.35 மணிக்கு காட்பாடியிலிருந்து விழுப்புரம் புறப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT