அவலூா்பேட்டையில் திடீா் மழை
விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்ததது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்ததது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கடந்த சில மாதங்களாக இருந்த பனி மூட்டம் விலகி, தற்போது கோடை காலம் ஆரம்பமாகும் முன்னதாகவே கடும் வெப்பம் நிலவி வந்தது. மேலும், நிகழாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், அவலூா்பேட்டையில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். செஞ்சியிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.