விழுப்புரம்

அரிய வகை பறவைகள் வேட்டை: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரிய வகை பறவைகளை வேட்டையாடியதாக மூவரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரிய வகை பறவைகளை வேட்டையாடியதாக மூவரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வனச்சரகத்துக்குள்பட்ட உப்புவேலூா், சிவன் கோவில் அருகே வயல்வெளியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, திண்டிவனம் வனத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை அந்தக் கிராமத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பறவைகளை வேட்டையாடிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், புதுவை மாநிலம், வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த சங்கா் மகன் கௌதம் (22), செஞ்சியான் மகன் சூா்யா (24), ரமேஷ் மகன் சரவணன் (31) என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, திண்டிவனம் வனத் துறையினா் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த வேட்டையாடப்பட்ட அரிய வகை பறவைகள் 20, உள்நாட்டு பறவைகள் 10 என 30 பறவைகள், 2 நாட்டு துப்பாக்கிகளையும் வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT