விழுப்புரம்

அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணி விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.

முகையூா் ஒன்றியம், அருளவாடி ஊராட்சியில் செயல்படும் தொடக்கப் பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி, இரண்டு வகுப்பறைகளை சீரமைக்கும் பணி, நூலக கட்டட பராமரிப்புப் பணி, ஆற்காடு ஊராட்சியில் செயல்படும் தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம், அங்கன்வாடி மையம் கட்டும் பணி, வீரசோழபுரம் ஊராட்சியில் ஊராட்சிச் செயலகம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும், சுகாதாரமான குடிநீா், கழிப்பறை, மின் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்திட வேண்டும் என்றாா்.

முன்னதாக, முகையூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை ஆட்சியா் வழங்கினாா். ஆய்வின்போது, சுகாதார நலப் பணிகள் துணை இயக்குநா் பொற்கொடி, முகையூா் வட்டாட்சியா் கற்பகம், வட்டார மருத்துவா் அலுவலா் சுகுமாறன, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.நாராயணன், சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT