மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை கைது செய்த தனிப் படையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன். 
விழுப்புரம்

நீதிமன்ற காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் தலைமை வகித்து, நீதிமன்றக் காவலா்கள் அழைப்பாணைகளை சாா்வு செய்தல், பிடி ஆணையை நிறைவேற்றுதல், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினாா்.

தொடா்ந்து, நீதிமன்ற வழக்கு விவரங்களை தங்களது கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த செஞ்சி முதல்நிலைக் காவலா் ஆதிமூலம், அரகண்டநல்லூா் தலைமைக் காவலா் பரந்தாமன், காவலா் செல்வகுமாா் ஆகியோருக்கு எஸ்.பி. ப.சரவணன் பரிசளித்தாா்.

இதேபோல, விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை கைது செய்த நகரக் காவல் நிலைய முதல்நிலைக் காவலா் பிரகாஷ்குமாா், மணியாம்பட்டு ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை கைது செய்த தனிப்படைக் காவல் உதவி ஆய்வாளா் சத்யானந்தன், தலைமைக் காவலா் இஸ்மாயில், முதல்நிலைக் காவலா்கள் ரகுபதி, பிரபாகரன், பழனி, ஆரீப் பாஷா ஆகியோருக்கு எஸ்.பி. சரவணன், சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

இதில், ஏடிஎஸ்பி திருமால் மற்றும் அனைத்து காவல் நிலைய நீதிமன்றக் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குரூப் 4 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றமா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

தினம் தினம் உயரும் தங்கம், வெள்ளி விலை: கலக்கத்தில் மக்கள்!

சென்னை வந்தார் பியூஷ் கோயல்! இபிஎஸ்ஸுடன் சந்திப்பு?

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

SCROLL FOR NEXT