கைது 
விழுப்புரம்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக விழுப்புரம், சாலாமேடு பகுதியில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, விழுப்புரம் சாலாமேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீ.ரமேஷை(49) விழுப்புரம் தாலுகா போலீஸாா் கைது செய்து, 120 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், கெடாா் காவல் சரகத்துக்குள்பட்ட அசோகபுரி பெட்டிக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதே ஊரைச் சோ்ந்த மு.குமுதாவை (40) கெடாா் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

”Great Friend! My Great Friend!” வைரலாகும் மோடி - நெதன்யாகு விடியோ!

நல்லகண்ணு மறைவு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இரங்கல் கூட்டம்

கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT