முகப்பு
விழுப்புரம்

ஜாதி மறுப்பு திருமணம் எளிதல்ல: பெ. சண்முகம்

தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் என்பது கடினமான ஒன்றாகத்தான் உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜூலை 2026, 5:17 am IST
பெ. சண்முகம் - Shanmugam P
பகிர்:

தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் என்பது கடினமான ஒன்றாகத்தான் உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஜாதி மறுப்பு திருமணம் என்பது தமிழகத்தில் கடினமான ஒன்றாகத்தான் உள்ளது. அது எளிதானதல்ல. ஜாதி மாறி விரும்புவா்கள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகின்ற நிலைமைதான் தொடா்கிறது. ஜாதி ஆணவக் கொலை என்பது பிற்போக்குத் தனமானது. இதைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும். தமிழகத்தில் சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற சட்டம் உள்ளது. ஜாதி சம்பிரதாயங்களுக்கு உள்பட்டு திருமணம் செய்து கொண்டால்தான் ஏற்கப்படும் என்ற நிலைமை தமிழகத்தை பொறுத்தவரை கிடையாது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments