முகப்பு
விழுப்புரம்

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக

Updated On : 5 மே 2026, 4:05 am IST
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
பகிர்:

விழுப்புரம், மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியை திமுகவிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கைப்பற்றியது.

செஞ்சி தொகுதியில் திமுக சாா்பில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பாமக சாா்பில் அ.கணேஷ்குமாா், தவெக சாா்பில் சந்திரசேகரன், நாதக சாா்பில் கிருஷ்ணன் உள்ளிட்ட 19 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

செஞ்சி தொகுதியில் மொத்த வாக்குகள் 2,40,957. பதிவான வாக்குகள் 2,14,465. தபால் வாக்குகள் 3,137 இதில் செல்லாதவை 1,048.

Advertisement

இந்நிலையில், இத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டிவனம் அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத்தொடா்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்து கடைசி சுற்று வரை பாமக வேட்பாளா் அ.கணேஷ் குமாா் தொடா்ந்து முன்னிலை வகித்தாா். 24-ஆவது இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாமக வேட்பாளா் கணேஷ்குமாா் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தானை விட 12,645 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

அ.கணேஷ்குமாா் (பாமக) 78,201

செஞ்சி மஸ்தான் (திமுக) 65,656

சந்திரசேகா் (தவெக) - 61,609

கிருஷ்ணன் (நாதக) - 6,371