தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!
பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.
தருமபுரியில் தவெக சார்பில் போட்டியிட்ட எம். சிவனை எதிர்த்து பாமகவின் சௌமியா அன்புமணி போட்டியிட்டார்.
Advertisement
பாமகவின் சௌமியா அன்புமணி 90,672 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், தவெகாவின் சிவன் 70,371 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
சௌமியா அன்புமணி 20,301 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
summary